வனமெனக் கிடக்கும் அவளது கூந்தல்

அதில் உலவ அழைக்கிறதா உன்னை,

அழகிய மேடு போன்ற மார்புகள் கண்டு

மலையேற்றக்காரன் போல்

ஆவல் மீதூறுகிறதா உன் கரங்களுக்கு,

நில் ! நேரம் கடந்து விடும் முன்

‘மறைந்திருந்து ’தாக்கத் துடிக்கும்

“புதர்”க் கொள்ளையனை’

முதலில்க் காதல் செய் !

*

இன்றும்இன்னொருவெற்றுநாளுடன்சேர்ந்தது

இன்னும்உன்தந்தைஅன்பற்றேஇருக்கிறான்

அவன்வரும்பாதையைஇருட்டுமூடுகிறது

வாஎன்குழந்தையேஉறங்கச்செல்லலாம்

*

கடவுள்நீலத்தாமரையிலிருந்து

உன்கண்களைப்படைத்தபிறகு

உன்பற்களுக்கு

வெண்மல்லிகையைத்தேர்ந்தெடுத்தான்,

முழுமுகத்தையும்

அல்லியைப்போலவடிவமைத்தான்

செண்பகபூவின்நிறத்தோடும்மென்மையோடும்

உடலைஅமைத்தான்

இப்படிப்பூப்போலஎல்லாவற்றையும்

படைத்துக்களைத்துப்போய்

உன்இதயத்தைமட்டும்

கடினமானபாறையால்வடித்துவிட்டான்

*

எனக்குஒளிதர

விளக்கு, நெருப்பு, விண்மீன், நிலாசூரியன்

எல்லாம்இருந்தும்

அவள்கண்களைப்பார்க்கும்வரை

எங்கும்இருண்டஇரவாகவேஇருந்தது

*

தாமரையின்குங்குமமகரந்தங்கள்

சொல்லித்தராமலேசொரிகின்றன

தேனீதானாகவேவந்து

விருப்பத்துடனேயேமாட்டிக்கொள்கிறது

(அதுபோல)

அவள்அந்தக்கலையில்கற்றுத்தேற

எந்தப்பயிற்சியும்வேண்டியதில்லை

ஆணின்மனதைவெல்ல

பெண்ணிற்குபுதியதந்திரங்களும்தேவையில்ல

*

அவளதுமுகம்நிலவில்லை

அவள்கண்களும்இருதாமரைகள்இல்லை

அவளதுகரங்கள்பொன்னுமில்லை

அவள்சதையும்எலும்பும்மட்டுமே

கவிஞர்கள்பொய்சொல்லுகிறார்கள்

ஆனாலும்நாம்அவளைவிரும்புகிறோம்

அந்தப்பொய்களையும்நம்புகிறோம்

 

-ஆங்கிலம்வழிதமிழில் – கலாப்ரியா