திக்குத் தெரியாத உலகில்

கொரானாவுக்குப் பின்னான வருங்காலத்தில் ஒருமுறை அணிகிற ஆடைகளுக்கான தேவை அதிகரிக்கும். ஆடைக்காக ஏன் அதிக பொருளை செலவிடவேண்டும்என்கிற ஒருகேள்வி நம் மனதில் எழுவதால், மறு சுழற்சி, நிலை நிறுத்தல், (Recycle, reuse ,sustain) போன்றவார்த்தைகள் மிக அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்பை கொண்டிருக்கிற ஆடைகளும் ஏற்கனவே பயன்படுத்திய ஆடைகள் இருந்தும்

தண்ணீர் போத்தல்களிலிருந்தும் மறுசுழற்சிமூலம் பெறப்பட்டநூல் இழைகளில் இருந்து உருவாக்கப்பட்டஆடைகள் அதிகமாக விற்பனைக்குவரும்  என்கிறார் நண்பர்  யுவராஜ்சம்பத் . இது கொரானாவுக்கு முந்தியே இவ்வாண்டின் ஆரம்பத்தில்  திருப்பூரில் ஆரம்பித்து விட்டது.

திருப்பூர் என்றால் சாயக்கழிவு வீட்டுக்கழிவு அதிகம் உள்ள நகரம் என்றப் படிமம் பலருக்கு வந்து விடுவதுண்டு. யதார்த்தம் கூட. திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை என்கிற ரீதியில் ஏதாவது இங்கு நடந்து கொண்டே  இருக்கின்றன.

சாயக்கழிவு மூட்டை மூட்டையாய் நொய்யல் கரையில் பார்த்தவர்களுக்கும் ஆற்று நீரில் கலந்து போவதைக் கண்டவர்களுக்கும்  கழிவிலிருந்து   இன்னொரு உப்பொருள் தயாரிக்க முடியும்  என்பதே பெரிய ஆறுதல் . அதுவும் டீசர்ட்., போன்றவை கூட …

நீடித்த இயற்கை சூழல் என்பது ” பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் “ மட்டுமே சாத்தியப்படும் . திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020  சமீபத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .

ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை  ஆகியுள்ளன.  இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .

திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை  மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை . திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது

திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள்  முக்கியம் ஆகும் .  டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து  உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் . பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது.  எப்படி முடிகிறது .இப்படித்தான்  அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் .

திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,  கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல்  2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது

திருப்பூரின் இன்றைய நிலை :

திருப்பூரின் 10000 தொழிற்சாலைகளும்மூடப்பட்டுவிட்டன. அதைநம்பியிருந்த 10 லட்சம்பேர்வீட்டில்முடங்கிக்கிடக்கின்றனர். திருப்பூரின் பெரிய பிரபலமான பல்வேறு ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திக்குத்தெரியாமல் அல்லாடி வருகிறார்கள். இதில் ஏற்கனவே நிகழ்வுற்ற ஒருமரணமும் அடங்கும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஒருவித்தியாசமான வியாபாரதந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள்..அதுஎதிர்மறையான விளைவைத் தற்போது தரப்போகிறது.. இனியாவது திருந்த வேண்டும்..

மாதம் 2500  கோடி ரூபாய் வியாபாரம் செய்கிற ஊருக்கு 2 மாதம் விற்பனை செய்த சரக்குப் பணம் வரவில்லை என்றால் அவர்கள் நிலை என்ன அடுத்து மூன்று மாதங்களுக்கு வியாபாரமே இல்லை என்றால் அவர்கள் முதலீடு என்னாவது? இந்தக் கேள்விகளுக்கு விடைகிடைத்தால் திருப்பூரின் நிலை உங்களுக்குத் தெளிவாகும்..

கோடைகால வியாபாரம்  60 லிருந்து 70 சதவீதம் திருப்பூரில் நடக்கும். கொரோனா இந்தக் கோடைகால வியாபாரத்தை அப்படியே நிறுத்திவிட்டது. தயாரித்த ஆடைகள் நிறுவனங்களிலும், வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்ட பெட்டிகள் கப்பல்களிலும் ,கப்பலிலிருந்து இறக்கப்பட்ட பெட்டிகள் அந்தந்ததுறைமுகங்களிலும் அப்படியே நிற்கின்றன.. இவர்களின் சோகத்தைச்சுமந்தபடி.. இந்தப்பாதிப்பு இந்தியாவைவிட வங்காளதேசம், வியட்நாம் மற்றும் கம்போடியாவிலும் அதிகம் இருக்கலாம் என்றுஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்..

இந்த ஆயத்த ஆடை வியாபாரம் ஏதோ உங்களுக்கும் ஆடைக்கும் உள்ள தொடர்பு மட்டுமே என்றோ அல்லது தயாரிப்பாளருக்கும் இறக்குமதியாளர்கள் உள்ளதொடர்பு என்றோ நினைப்பது நல்லது அல்ல ( யுவராஜ் சம்பத் )

மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர். மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில்  மறைந்த பூசணிக்காயாய் இருக்கின்றன.

பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தையேத் தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது.

இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
  2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
  3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
  4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
  5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
  6. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
  7. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
  8. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
  9. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
  10. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
  11. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
  12. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
  13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
  14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
  15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்