மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

உலக மகளிர் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் ரஷ்யாவின் உலான்-உடேவில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின், மேரி கோம் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரின் கால் இறுதிப்போட்டியில் கொலம்பியாவின் வெலன்சியா விக்டோரியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தார். அரையிறுதியில் துருக்கியின் பஸனாஸ் ககிரோகுலுவுடன் நேற்று மோதினார். இதில் 1-4 என்ற கணக்கில் தோற்றதையடுத்து, மேரி கோம்-க்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் பெறவிருக்கும் 8ஆவது பதக்கம் இது. இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். ஏற்கெனவே 6 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் புசெனாஸ் காகிரோக்ல் ரஷ்யாவின் லிலியா ஏட்பேவாவை எதிர்கொள்வார்.