நூலின் பெயர் : ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும்
நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
வெளியீடு : புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024.
தொலைபேசி: 94446 32561
நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகத்தின் முன்னணிக் கட்சிகள், மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளில் ஒன்றாக ‘தமிழ் ஈழம் பெற்றுத் தருவோம்’ என்று முழங்கின.
சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய கட்சிகளின் நிலைகுறித்தும், ஈழப்பிரச்சினையின் உண்மைநிலையையும் மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் வெளிவரும் நூல் இது.
இன்று கருணாநிதி அணி பெற்றிருக்கும் வெற்றியை, காங்கிரஸின் ஈழக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்வது எந்த அளவுக்குத் தவறானதோ, அதேபோல, ஜெயலலிதா அணி வென்றிருந்தால் அந்த வெற்றியை ‘ஈழ ஆதரவு அலை’ என்ற வியாக்கியானம் செய்வதும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருந்திருக்கும்.
இந்தத் தேர்தலில் பலவகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு சேகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அணி வென்றிருக்கும் பட்சத்தில் இவ்வெளியீடு அதிகம் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். தற்போது ஜெயலலிதா தோற்றுவிட்டாரெனினும், சந்தர்ப்பவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதுதான் இந்த வெளியீட்டின் இலக்கு.
பாண்டியன்