
துள்ளித் துடிக்கும் உடல்
நிலவொளியைப் திருப்பிப் போடுகிறது
ஆழத்தின் அடிவாரத்தை நோக்கி
சோம்பேறித்தனமாக விழுகிறது
அறுபட்ட தலை
வானத்தைக் கூட்டிக் கொண்டு
நடக்கிறது ஆறு
ஆற்றைப் பார்த்தபடி
கிடக்கிறது வானம்.
புதிதாக
கருஞ்சிறகுக் கொம்பும்
செங்குருதிக் கன்னமும்
கொண்ட அந்தப் பறவை
இந்தப் பூமரக் கிளையில் அமர்ந்து
அவசரமாக மலங்கழித்துவிட்டுச்
சென்றதைப் போல
நம் காதல்
உன் குரலை மட்டும்
நீ எனக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டாய்
அது இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறது
நீலக்கடல் அசையும் ஒலி
ஒலிகளுக்கிடையே எப்படியோ
தூங்கினேன்
மௌனத்திற்கிடையே எப்படியோ
விழித்தேன்
இரவு வானில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரப் புள்ளிகளை
மனக்கோடுகளால் இணைத்து
உன் உருவத்தை வரைகிறேன்
ஒரு மனநோயாளியின்
ஓவியத்தைப் போல
வினோதமான வார்த்தைகளால்
உன்னைக் காதலிப்பதாகச் சொன்னேன்
விளங்கும்படியான மௌனத்தில்
என் மேல் காதலில்லை என்றாய்
என் கவிதைப் பட்டறையில்
காதலை வடிவமைக்கத் தொடங்கினேன்
புதிதாக