முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
உயிரோசை நூறாவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
புதிய தொடர் : தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்
ஆனந்த் அண்ணாமலை
இட் ஸ் நீயூ எக்ஸ்பீரியன்ஸ் ( its new experience)
அப்துல்காதர் ஷாநவாஸ்
ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள்
இந்திரஜித்
பயனற்றுப் போகும் வேளாண் திட்டங்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
பணத்தின் அடையாளம்
நிஜந்தன்
கால்பந்து: சில அற்ப சந்தேகங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
காமிக்ஸ் கனவுகள்
என்.விநாயக முருகன்
பிரச்சினையும், போராட்டமும்
சந்தியா கிரிதர்
மின்புத்தகங்கள்: திருட்டு, இலவசம் மற்றும் வியாபார உத்தி
ஆர்.அபிலாஷ்
குருதியும் கண்ணீரும் தோய்ந்த இடப்பெயர்வுகள்
சந்திரசேகர ஆஸாத்
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் குறைந்து வரும் இடைவெளி: நக்கீரன் கோபால் முதல் சவுக்கு சங்கர் வரை
மாயா
கவிதை
அது கவனிக்கப்படலாம் ...!
கலாசுரன்
பிரிவின் வாசம்..!
இளங்கோ
வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..
ஆறுமுகம் முருகேசன்..
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
மர்மத்தின் முடிச்சு
ப.மதியழகன்
சூறாவளியின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்,
சிறுகதை
வெள்ளைக்குடைக்குள்
கே.பாலமுருகன்
நானும் உன் பின்னால் அங்கே வர
லதாமகன்
ரங்க சேவை
லாவண்யா சுந்தரராஜன்
'அது'
அஷ்ரஃப் சிஹாப்தீன்
இந்தவாரக் கருத்துப்படம்
ஜெபம்
பாபுஜி
பாறை
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சூறாவளியின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்,

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது
இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது
சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை
பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது 
தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்
இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்
பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்
இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்
காலம்
இன்னுமோர் பாடலைக்
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com