முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
கறுப்புப் புரட்சி
இந்திரா பார்த்தசாரதி
புதிய விடியல்
வாஸந்தி
மார்க்சின் மறுபிறப்பு
சுகுமாரன்
பதற்றமாகும் நினைவு நாட்கள்
அ.ராமசாமி
போன மச்சான் திரும்பி வந்தான்!
இந்திரஜித்
பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்
ஆர்.அபிலாஷ்
கர்நாடக புத்திஜீவிகளும் தமிழக உணர்ச்சிப் பெருக்கும்
தமிழவன்
கனவு இல்லம்: கலைந்த கனவு
செல்லமுத்து குப்புசாமி
ராம் கோபால் வர்மாவின் ‘நிசப்த்’
யமுனா ராஜேந்திரன்
நடிப்பும் துடிப்பும்!
சுதேசமித்திரன்
உந்தன் கண்ணன் என்டே ஈசோ !
ஸ்ரீபதி பத்மநாபா
மௌனம் என்னும் புகலிடம்
பாவண்ணன்
சுஜாதா கொடுத்த சாக்லேட்
பாண்டியன்
கிராமத்துத் தெருக்களின் வழியே. . .
ந. முருகேசபாண்டியன்
காவி ராணுவம்
மனோஜ்
கவிதை
பிறகு ஏன் அழவேண்டும்?
இர.ஜெ.பிரேம்குமார்
நீ வந்து விட்டாய்
இன்பா சுப்ரமணியன்
துணைவரும் நிழல்
இவான்
திரையாலாகுவது...
லஷ்மி சாகம்பரி
என்றாள் காவ்யா
மதுமிதா
ஒற்றைக் கனவும், இரட்டைச் சிறகுகளும்
வே . முத்துக்குமார்
மழைக்கால டைரிக்குறிப்பு
ஞான தேஷிஹன்
அவனது கண்கள் வழியாக
ஹரன்பிரசன்னா
சிறுகதை
யதார்த்த மனுசி
கே.பாலமுருகன்
பொது
இது ஒரு தந்திரம்!
தமிழ்மகன்
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும்
கழனியூரன்
புது நூல்
அமெரிக்க தேர்தல்
பாபுஜி
குளிர்கால கூட்டத்தொடர்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்
கடித இலக்கியம்
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
கழனியூரன்
பழமொழிகளும் சொலவடைகளும்
'கி.ரா' - டாக்டர் அனந்தராமனுக்கு எழுதியது. . .
-
பொது
வாழை
சிவன்
கடிதங்கள்
சூஃபி சொன்ன கதை - பீவியும் பகவதியும்
ஹரன் பிரசன்னா
பதிவுகள்
நகர்வலம்
ஜெயகுமார்
சிற்றிதழ் பார்வை
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008
-
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
-
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
கழனியூரன்

201. அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.


202. அவன் நா (நாக்கு) அசைந்தால், (பேசினால்) நாடு அசையும்.


203. அவன் பேசுகிறது தில்லு முல்லு; போகிறது திருவாதிரை, திருவோணம்.


204. அவன் பேச்சைத் தண்ணியில்தான் எழுதணும் (நம்பக் கூடாது).

 

205. அழகு (அழகி) இருந்து அழும் (அழுவாள்); அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.


206. அழகு (அவளுக்கு) ஒழுகுகிறது; ஓட்டைப் பானையைக் கொண்டுவா. பிடித்து வைக்க. (அங்கதச் சுவை உடைய பழமொழி இது)


207. அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. (அங்கதச் சுவை)

 

208. அழச் சொல்வார் தமர் (உறவினர்) சிரிக்கச் சொல்வார் பிறர்.


209. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (திருக்குறளின் கருத்தில் அமைந்த பழமொழி இது. ஏழைகளை அழவைத்துச் சேர்த்த பணம் எல்லாம்; சேர்தவனை அழவைத்து விட்டுச் சென்று விடும்)


210. அழித்துக் கழித்துப் போட்டு; ‘வழித்து நக்கி' என்று பெயரிட்டானாம். (அங்கதச்சுவை)


211. அழிந்த கொல்லையிலே, குதிரை மேய்ந்தால் என்ன...? கழுதை மேய்ந்தால் என்ன..? (எந்தப் பயனும் இல்லை என்பது பொருள்)


212. அழிந்தவள் யாரோடு போனால் என்ன..?


213. அழி வழக்குச் (பொய் வழக்கு) சொன்னாலும், பழிபொறுப்பான் மன்னவன்.


214. அழுகிற ஆணையும்; சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே( எப்போதும் அழுகிற ஆண்; சிரிக்கிற பெண்)


215. அழுகிற பிள்ளையிடம் வாழைப்பழத்தைக் காட்டி ஏமாற்றுவதைப் போல. . . (நகைச்சுவை)


216. அழுகிற வீட்டில் இருந்தாலும், ஒழுகுகிற வீட்டில் குடியிருக்க முடியாது.


217. அழுகை ஆங்காரத்தின் (கோவத்தின்) மேல்; சிரிப்பு கெலிப்பின்(மகிழ்வின்) மேல்.


218. அழுக்கை அழுக்கு கொல்லும் (பழங்காலத்தில் அழுக்கான துணியை வெளுக்க வண்ணான் அழுக்குத் துணியுடன் உவர் மண்ணைச் சேர்த்து அத்துணியை மேலும் அழுக்காக்கிபின் அடித்துத்துவைப்பான். இப்போது துணியில் ஏறிய உவர்மண் என்ற அழுக்குடன் துணியில் ஏற்கனவே இருந்த அழுக்கும் சேர்ந்து ஆற்று நீரோடு போய்விடும். துணி வெள்ளையாய் வெளுத்துவிடும். இங்கு அழுக்கை அழுக்கே கொன்றுவிடுகிறது)


219. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் எப்போதும் இருக்காதே! (அவலச்சுவை)


220. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com