முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
கறுப்புப் புரட்சி
இந்திரா பார்த்தசாரதி
புதிய விடியல்
வாஸந்தி
மார்க்சின் மறுபிறப்பு
சுகுமாரன்
பதற்றமாகும் நினைவு நாட்கள்
அ.ராமசாமி
போன மச்சான் திரும்பி வந்தான்!
இந்திரஜித்
பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்
ஆர்.அபிலாஷ்
கர்நாடக புத்திஜீவிகளும் தமிழக உணர்ச்சிப் பெருக்கும்
தமிழவன்
கனவு இல்லம்: கலைந்த கனவு
செல்லமுத்து குப்புசாமி
ராம் கோபால் வர்மாவின் ‘நிசப்த்’
யமுனா ராஜேந்திரன்
நடிப்பும் துடிப்பும்!
சுதேசமித்திரன்
உந்தன் கண்ணன் என்டே ஈசோ !
ஸ்ரீபதி பத்மநாபா
மௌனம் என்னும் புகலிடம்
பாவண்ணன்
சுஜாதா கொடுத்த சாக்லேட்
பாண்டியன்
கிராமத்துத் தெருக்களின் வழியே. . .
ந. முருகேசபாண்டியன்
காவி ராணுவம்
மனோஜ்
கவிதை
பிறகு ஏன் அழவேண்டும்?
இர.ஜெ.பிரேம்குமார்
நீ வந்து விட்டாய்
இன்பா சுப்ரமணியன்
துணைவரும் நிழல்
இவான்
திரையாலாகுவது...
லஷ்மி சாகம்பரி
என்றாள் காவ்யா
மதுமிதா
ஒற்றைக் கனவும், இரட்டைச் சிறகுகளும்
வே . முத்துக்குமார்
மழைக்கால டைரிக்குறிப்பு
ஞான தேஷிஹன்
அவனது கண்கள் வழியாக
ஹரன்பிரசன்னா
சிறுகதை
யதார்த்த மனுசி
கே.பாலமுருகன்
பொது
இது ஒரு தந்திரம்!
தமிழ்மகன்
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும்
கழனியூரன்
புது நூல்
அமெரிக்க தேர்தல்
பாபுஜி
குளிர்கால கூட்டத்தொடர்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்
கடித இலக்கியம்
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
கழனியூரன்
பழமொழிகளும் சொலவடைகளும்
'கி.ரா' - டாக்டர் அனந்தராமனுக்கு எழுதியது. . .
-
பொது
வாழை
சிவன்
கடிதங்கள்
சூஃபி சொன்ன கதை - பீவியும் பகவதியும்
ஹரன் பிரசன்னா
பதிவுகள்
நகர்வலம்
ஜெயகுமார்
சிற்றிதழ் பார்வை
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008
-
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
-
அவனது கண்கள் வழியாக
ஹரன்பிரசன்னா

யோகம்

என் அகமெங்கும் நெருப்பெரிய
தீராத வனத்தில்
அடைமழையில்
காத்துக்கொண்டிருக்கிறாள் குடைப்பெண்

எட்டும் தூரத்திலிருக்கும் அவள் கை
நெருங்க நெருங்க
தூரச் செல்கிறது

உச்சி ஏறியபின்புதான் கேட்கிறது
மரத்தின் கீழே காத்திருக்கும்
செந்நாய்களின் மூச்சிரைப்பு

உச்சிக்குப் பின்னும் மரம் நீட்டும்
யோகமொன்றில் அமர்கிறேன்
கொதி நெருப்படங்க

மெல்ல புன்னகைக்கிறாள் குடைப்பெண்.



அந்தரங்கம்

கண்ணாடியின் அந்தப்புறமிருந்து
செய்கையில் நிறைய சொன்னான்
நான் இப்புறமிருந்து
தலையாட்டிக்கொண்டிருந்தேன்
கண்ணாடியில் பிரதிபலிக்கின்றன
ஏகப்பட்ட கண்கள்

 

அவனது கண்கள் வழியாக

நிறைய பேசினான்
கேட்டுக்கொண்டே இருந்தேன்
நானும் என்னென்னவோ சொன்னேன்
திடீரென்று தாமரை மலரைப் பற்றிச் சொன்னான்
சட்டென நினைவுக்கு வந்தது
சில நாள்களுக்கு
கனவெங்கும் விரிந்து கிடந்த
தாமரை மலர்கள்
சொன்னேன், கேட்டுக்கொண்டான்.
பின்பும் ஏதேதோ பேசினோம்
வெறுமையடைந்த சொற்களின் ஒரு தருணத்தில்
எலுமிச்சை பற்றி ஏதோ சொன்னான்.
ஒரு நொடி வியப்புக்குப் பின்
என் கண்முன் விரிந்தது
இரண்டு நாள் முன்பு கண்ட கனவில்
சிதறி ஓடிய எலுமிச்சைகள்.
கேட்டுக்கொண்டான்.
தொலைபேசியை வைத்ததும்
மென்மையாகப் புன்னகைத்திருப்பானோ?.



ப்ளாட்ஃபார்ம்

காத்திருந்த இரண்டு ரயில்கள்
எதிரெதிர் நகரத் தொடங்க
இடைப்பட்ட காலத்தின் அதிர்வில்
நிலைகொண்டிருந்தேன்
கண்ணெங்கும் கம்பிகள் கடக்க

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com