
மின் விசிறிக் காற்றுக்கும்,
சன்னற் திரைச் சீலைக்கும்
பிறந்து கொண்டிருக்கும்
வெளிச்சக் கீற்றுகள்
உறக்கம் புணராத கண்கள் மூடி
இமைக்குள் இருக்கும் இருட்டைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்
அனிச்சையாய் ஆரம்பித்து
அன்றுக்கான சலிப்புகளை
அசைபோட்டு ஓய்கையில்
எப்படி இன்றை விட தீர்க்கமாய்
நாளைகளை நம்புகிறேன் இன்னும்
என்பது தெரியாது
நம்பிக்கை கொள்வதை விட
நம்பிக் கொள்வதென்பது
பாதுகாப்பானதா
என்ற பிரக்ஞை இல்லாமலே